அப்போது பேசிய தோனி, ”நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த தொடருக்கு பின்னர்தான் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வில் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறேன். எனது 15 மாத மகள் ஜிவா என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கவில்லை.
எனவே, எனது மகளுக்கு நான்தான் அவளது மகள் என்று உணர வைக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் போகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஜிம்பாப்வே குறித்து கூறுகையில், “இது ஒரு சிறந்த செயல்முறை என்று நினைக்கிறேன். முக்கிய நேரத்திலும், எதிர்தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட அழுத்தத்திற்கு இடையிலும் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது முக்கிய காரணம் ஆகும். பந்துவீச்சு சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.