நேற்று ஞாயிற்றுக்கிழமை [25-10-15] அன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியில் 214 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.
சாதனை முறியடிப்பு:
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் ஹசிம் அம்லா 13 பந்துகளை சந்தித்து 25 ரன்கள் [5 பவுண்டரிகள்] குவித்து நிலையில் வெளியேறினார். ஆனால், மொஹித் சர்மாவின் பந்தில் பவுண்டரி அடித்தபோது 15 ரன்களை தாண்டினார். அப்போது இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதற்கு முன்னதாக அதிவேக 2000, 3000, 4000, 5000 ரன்களை குவித்தவர் என்ற பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.