கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹர்பஜன் சிங் அறிவிப்பு

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் ஹர்பஜன் சிங் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான சுழற்பந்து வீச்சாளராகப வலம் வந்தவர் ஹர்பஜன் சிங்.

இவர் எதிரணியினருக்கும் முன்னணி பேட்ஸ் மேங்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்.

இந்நிலையில், இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத  நிலையில் ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடி வந்தார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அதில், 23 வருட கால கிரிக்கெட் பயணம் அழகுடன்  நினைவுகூறத்தக்கதாகவும் மாற்றிய ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழியில் பேசி, தமிழில் எழுதுவதால் தமிழர்களால் பச்சைத் தமிழன் என செல்லமாக அழைக்கப்படும் ஹர்பஜன் சிங் நடிப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்