தமிழ் இலக்கிய அறக்கட்டளையின் சார்பிலும் காந்தி ஜெயந்தி விழா

திங்கள், 10 அக்டோபர் 2022 (21:08 IST)
சேலத்தில் நடைபெற்ற  அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் இலக்கிய அறக்கட்டளையின் சார்பிலும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 
 
இவ்விழாவில் சமூக சேவகர்கள் செவிலியர்கள் ஆசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு காந்திய விருது வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற காவல்துறை துணைத் தலைவர் திரு.பன்னீர்செல்வம், ஐபிஎஸ் அவர்களும் அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் திரு.சத்தியமூர்த்தி சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
 
இதற்கு முன்பாக தமிழகத்தின் முன்னாள் முதல்வர் தமிழக எதிர்க்கட்சியின் தலைவர் இடைக்கால பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய அண்ணன் #எடப்பாடியார் அவர்களை மரியாதை நிமித்தமாக அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் திரு.சத்தியசீலன் அவர்களும், அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் புகலூர் ஏ.முஹம்மது கஃபில்கான் அவர்களும், அகில இந்திய கூட்டமைப்பின் மாநில செயலாளர் திரு.சேக் பரீத் அவர்களும் உடன் சென்று அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
 
Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்