கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக ஓடிய ரசிகர்

வியாழன், 28 ஜூலை 2016 (09:45 IST)
இலங்கைஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் ரசிகர் ஒருவர் நிர்வாணமாக ஓடி உள்ளார்.


 
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. ஆஸ்திரேலியா-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் பல்லகெலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதை அடுத்து, வீரர்கள், நடுவர்கள், பாதுகாவலர்கள் என அவைரும் மைதானத்தைவிட்டு வெளியேறினர். அப்போது ரசிகர் ஒருவர் தடுப்பு அரணை தாண்டி மைதானத்திற்குள் புகுந்து ஆடிக்கொண்டே ஓடினார். பின்னர் திடீரென தன் ஆடைகள் முழுவதையும் களைந்துவிட்டு நிர்வாணமாக ஓடினார். பின்னர் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்