இதில் இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் கேப்டன் தோனி 82 ரன்களும், முரளி விஜய் 18 ரன்களும், அஷ்வின் 13 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை இழந்தனர்.
இங்கிலாந்து வீரர்கள் வோக்ஸ் 3, ஜோர்டன் 3, ஆன்டர்சன் 2, ப்ராட் 2 விக்கெட் எடுத்தனர்.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுதம்டன் டெஸ்டில் 266 ரன்கள் வித்தியாசத்திலும், மான்செஸ்டர் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.