உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருவதால் மூத்த வீரர்களான தோனி, கோலி, அஸ்வின் ஆகியோருக்கு சற்று ஓய்வு அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அணியை வழிநடத்தும் கேப்டன் பதிவு ரோகித் சர்மா அல்லது ரெய்னாவிற்கு கிட்டும் என தெரிகிறது. மேலும் உள்ளூர் போட்டிகளில் உத்தப்பா அசத்தியுள்ளதால் அணியில் இடம்பெறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரகானே, ஸ்டூவர்ட் பின்னி, அம்பத்தி ராயுடு, மொகித் ஷர்மா ஆகிய வீரர்கள் அணியில் வழக்கம் போல் செயல்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.