ஐ.பி.எல் அணிகள் சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்லும்: தோனி நம்பிக்கை

செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (14:44 IST)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐ.பி.எல் அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் முதன்மை சுற்று ஆட்டங்கள் செப்டம்பர் 17 முதல் தொடங்கவுள்ளது. இதில் 10 அணிகள் விளையாடுகின்றன.

நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி நிருபர்களிடம் கூறியிருப்பது, “ஐ.பி.எல். போட்டியில் பிராவோ காயத்தால் விலகினார். தற்போது அவர் அணிக்கு திரும்பி இருப்பது கூடுதல் பலம். எங்கள் அணியில் சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர்.

மேலும், மைதான சூழ்நிலையை கருத்தில் கொண்டால் ஐ.பி.எல் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது“. இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்