இந்திய தரப்பில், தோனி 30 ரன்னும், கோலி 23 ரன்னும், அஸ்வின் 10 ரன்னும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னிலே வெளியேறினர். இந்திய அணியின் மோசமான இந்த தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி பேட்ஸ்மேன்களை குறை கூறினார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர், அவர்கள் மோசமான ஷாட்களை அடுத்து வெளியேறினர். மிடில் ஓவர்களில் எந்த ஒரு இணையும் நிலைத்து நின்று ஆடவில்லை. மேலும் நியூசிலாந்து வீரர்கள் இந்த ஆடுகளத்தை சிறப்பாக பயன்படுத்தினர். இந்திய பேட்ஸ்மேன்கள் தான் மோசமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தனர். 127 ரன் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எளிதாக எடுக்க கூடிய இலக்கு தான் என்றார் இந்திய அணியின் கேப்டன் தோனி.