இந்த முடிவை பாகிஸ்தான் அணியிடம் எதிர்பார்க்க முடியாது- டேனிஷ் கனேரியா கருத்து!

செவ்வாய், 3 ஜனவரி 2023 (08:15 IST)
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையே மிக குறுகிய கால இடைவெளியே உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து அதிக போட்டிகளில் விளையாடுவதால் வீரர்கள் காயம் அடைவது சம்மந்தமாக நேற்று நடந்த பிசிசிஐ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் முன்னணி வீரர்கள் அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கும் படி ஐபிஎல் உரிமையாளர்கள் மற்றும் என்சிஏ ஆகியோரை இணைந்து கண்காணிக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட்டர் டேனிஷ் கனேரியா “பிசிசிஐ யின் இந்த முடிவை புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள். வீரர்களின் பனிச்சுமையை குறைக்கும் முயற்சி பாராட்டத்தக்கது. இதுபோன்ற ஒரு முடிவை பாகிஸ்தான் அணியில் எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தான் வீரர்கள் தேசிய அணியை விட  பி எஸ் எல் தொடரில் விளையாடவே விரும்புவார்கள்” எனக் கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்