கேப்டன் தோனி, ஷாக்சி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது

சனி, 7 பிப்ரவரி 2015 (12:13 IST)
இந்திய அணியின் கேப்டனுக்கு நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்துள்ளதால், தன் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்துள்ளார், கேப்டன் தோனி.
 

 
2010 ஆம் ஆண்டு கேப்டன் தோனிக்கும், ஷாக்சிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஷாக்சி கர்ப்பமானார். உள்ளூர் மற்றும் ஐ.பி.எல். விளையாட்டு போட்டிகளில் தனது கணவரின் ஆட்டத்தை காண தவறாமல் மைதானத்திற்கு வந்துவிடுவார் ஷாக்சி. எனினும் கர்ப்பம் காரணமாக தோனியுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதை தவிர்த்தார்.
 
இந்நிலையில் கர்ப்பிணியாக இருந்த ஷாக்சிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் உடனே ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் ஷாக்சிக்கு பெண் குழந்தை பிறந்ததுள்ளது. மேலும் குழந்தை 3.7 கிலோ எடையுடன் இருப்பதாகவும் தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக கேப்டன் தோனி ஆஸ்திரேலியாவில் உள்ளதால் தனது மகளை நேரில் கான முடியாத நெருக்கடியில் உள்ளார் தோனி.

வெப்துனியாவைப் படிக்கவும்