துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சேவாக் 58 பந்தில் 122 ரன்கள் குவித்து சதம் அடித்தார். இந்த சதத்தில் 12 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடக்கம். பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையே களத்திற்குள் நுழைந்த மேக்ஸ்வெல் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்.
ஸ்மித், மெக்கலம், ஹஸ்சி போன்றோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில், ரெய்னாவின் அதிரடியான ஆட்டத்தால் சென்னை 6 ஓவரில் 100 ரன்னை குவித்தது. ரெய்னா 25 பந்தில் 12 பவுண்டரி, 6 சிக்சருடன் 87 ரன் எடுத்தார். ஆனால், ரெய்னா அவுட் ஆன பிறகு சென்னையின் ரன் குவிப்பு குறைய துவங்கியது.