நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்களை களங்கடித்த வீரர் என்றால் அது கண்டிப்பாக நியூசிலாந்தின் எலியாட் என்றால் மிகையாகாது. ஆம் நேற்று அரங்கேறிய வாழ்வா சாவா என்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து வீரர் எலியாட்டின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க அவ்வணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்ததுள்ளது.
எலியாட் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க்கில் பிறந்தவர் ஆவார். மேலும் அந்நாட்டு உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் எலியாட்டிற்கு அங்கீகாரம் கிடைக்காததால், நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார். பின்னர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் சேர்ந்து விளையாடி வந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து நாட்டை முதல்முறையாக இறுதி போட்டிக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.