கெயில் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சி பெண் நிருபருக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது பெண் நிருபரை பார்த்து உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார், மேலும் ``நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்'' என்றார்.
கெயிலின் நடவடிக்கை ஏற்றுக் கொள்ள முடியாதது. இதுகுறித்து அவர் விளையாடும் அணி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும். மேலும், பிக்-பாஸ் கிரிக்கெட் போட்டியை குழந்தைகள், பெண்கள் மற்றும் குடும்பமாக கண்டு கழிக்கின்றனர். எனவே, இதுபோன்ற செயல்களுக்கு இங்கு இடமில்லை என பிக்பாஷ் போட்டியின் முதன்மை செயல் அலுவலர் ஆண்டனி எவரார்ட் தெரிவித்தார்.