வீரர்கள் தங்குவதற்கு ஓட்டல் அறைகளை ஒப்பந்தம் செய்வது வழக்கமான செயல்தான். இதில் ஓட்டல் கிரண்ட் காகாதியாவில் சென்னை அணி வீரர்கள் தங்கி இருந்தனர். இந்நிலையில் மும்பை வீரர் அம்பத்தி ராயுடு, வீட்டில் தயாரிக்கப்பட்ட பிரியாணியை தோனிக்கு கொடுத்து அனுப்பினார். ஆனால் இதற்கு அனுமதி அளிக்க ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் கோபம் அடைந்த கேப்டன் தோனி, ஓட்டல் புக்கிங்கை ரத்து செய்யுமாறு கூறியுள்ளார். இது குறித்து ஓட்டல் நிர்வாகம் கூறுகையில், வெளியில் இருந்து கொண்டுவரப்படும் உணவுகளுக்கு ஓட்டல்களில் அனுமதி இல்லை என்ற போதிலும், வீரர்களுக்காக நிர்வாகம் பரிசீலனை செய்தது.