இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் அசார் அலி, சமி ஆகிய வீரர்கள் சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து அசத்திய அசார் அலி சதத்தை பதிவு செய்தார். பின்னர் சோகைல் அரை சதத்தை கடந்தார். எனினும் பின் வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் பாகிஸ்தான் அணி 49 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்னர் 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. இதைத்தொடர்ந்து வங்கதேச வீரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் தொடக்க ஆட்டக்காரர்களான இக்பால், சர்கார் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர்.எனினும் இக்பால் 64 ரன்களில் வெளியேறினார்.