இது குறித்து பிரையன் லாரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், " ரோஹித் சர்மா 200 ரன்களை எடுத்த போது, அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதத்தை எட்டியுள்ளார் என்பதை கேள்விப்பட்டேன். ஆனால் இது போன்று அசாத்தியமான ஆட்டத்தை காண்பேன் என்று நான் அறிந்திருக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,"நாங்கள் அனைவரும் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்திற்கு எதிராக மான்செஸ்டரில் 189 ரன்கள் எடுத்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். அப்போது அந்த உலக சாதனை சில காலங்களுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அப்போதே 200 ரன்கள் எடுக்க முடியும் என்பதை உணர்ந்திருந்திருந்தேன். ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்படும் என்று என்னால் கொஞ்சம்கூட நம்பமுடியவில்லை. இது ஒரு சிறந்த இன்னிங்க்ஸ்.