கடந்த 2009 ஆம் ஆண்டில் இருந்து சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இத்தொடரில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் இத்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இல்லாததால், இதற்கு மாற்று ஏற்பாடாக புதிய தொடரை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
இதுகுறித்து ஐபிஎல் சேர்மேன் சுக்லா கூறுகையில், சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை நிறுத்திவிட்டு புதிய தொடரை அறிமுகப்படுத்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் இதுகுறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொண்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.