சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமனம்

சனி, 14 மே 2016 (08:09 IST)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக அனில்  கும்ப்ளே மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் மூன்று ஆண்டுகள் நீடிப்பார்.
 
இந்த கமிட்டியில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்  மற்றும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் மகிளா ஜெயவர்த்தனே ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இதனையடுத்து, ஐசிசி-ன் முதல் கூட்டம் மே 31 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஐசிசி தலைவராக பதவியேற்றுள்ள அனில் கும்ப்ளே-வுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்