பின் இணைந்த பெய்லி 2 ரன்னிலலிம், சுமித் 40 ரன்னில் மொய்ன் அலி பந்திலும் ஆட்டம் இழந்து தடுமாறியது ஆஸ்திரேலிய அணி. பின்னர் மேக்ஸ்வெல் – மார்ஷ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். மேக்ஸ்வெல் 95 ரன்களில் வெளியேறினார்.
பின் இங்கிலாந்து அணி தங்கள் இன்னிங்சை தொடங்கியது. இதில் பெல் 8 ரன்களில் வெளியேறினார். பின்னர் டெய்லர் 4 ரன்கள், மார்கன் டக் அவுட் ஆகி வெளியேறினர். பின் வந்த வீரர்களும் வரிசையாக ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 39.1 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 112 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.