ஆசிய கோப்பை: ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் வெற்றி இலக்கு

புதன், 31 ஆகஸ்ட் 2022 (21:15 IST)
ஆசிய கோப்பையில் இன்றைய போட்டியில் ஹாங்காங் அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா மற்றும் ஹாங்காங் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இதில், கே.எல்.ராகுல் 36 ரன்களும், ரோஹித் சர்மா 21 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 68(26) ரன்களும் அடித்துள்ளனர்.

3 ஆண்டு காலமாக எந்த போட்டியிலும் சோபிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி, இன்று ஹாங்ஹாங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் கள் எடுத்து, ஹாங்காங் அணிக்கு 193 ரன் கள் வெற்றி இலக்காக  நிர்ணயித்துள்ளது.

ஹாங்காங் தரப்பில் சுக்லா மற்றும் கசன்வார் தலா  1 விக்கெட் கைப்பற்றினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்