2015 ஆஷஸ் கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரின் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதுவரை 6 இன்னிங்சில் விளையாடிய கிளார்க் 94 ரன்களை மட்டுமே சேகரித்துள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இதன்காரணமாக கிளார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் களத்தில் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற விமர்சனங்கள் அரங்கேறதான் செய்யும். எனினும் கிரிக்கெட்டில் எனக்கு இருக்கும் ஈடுபாடு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது.