11 ஆவது உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஜெயசூர்யா தலைமையிலான கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்த தேர்வாளர்கள் புதிய கேப்டனை நியமிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் தொடர்ந்து நீடிக்கிறார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை வழிநடத்துவார். மேலும் 20 ஓவர் போட்டிகளை மலிங்கா வழிநடத்துவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.