புதிய ஐபிஎல் அணியான அகமதாபாத் அணியின் பெயர் இதுதான்!

செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (09:53 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக இணையும் அகமதாபாத் அணியின் பெயரை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இந்த ஆண்டு புதிதாக களமிறங்கும் அகமதாபாத் அணி களமிறங்குகிறது. அவருக்காக 15 கோடி ரூபாயை ஒப்பந்த தொகையாக அந்த அணி அறிவித்துள்ளது. இவரைத் தவிர ரஷித் கானை 15 கோடி ரூபாய்க்கும், ஷுப்மன் கில்லை 7 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாம். மொத்த ஏலத்தொகையான 90 கோடியில் 37 கோடியை 3 வீரர்களுக்காக ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ஏலத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக அணியின் பெயரை அறிவித்துள்ளது. அகமதாபாத் டைட்டன்ஸ் என்று பெயர் சூட்டியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்