உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி

சனி, 24 மார்ச் 2018 (10:47 IST)
ஜிம்பாப்வே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்மாக பால் ஸ்டிர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரையன் 41 ரன்களும் எடுத்தனர். 
 
பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ஷாசாத் 54 ரன்களும், குல்படின் நயிப் 45 ரன்களும் எடுத்தனர்.
 
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2019-ம் ஆண்டுக்கான உலகககோப்பையில் கலந்து கொள்ளும் அணிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்