பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், புஜாராவும் நன்றாகவே துவங்கினர். ஆனால், சேவாக் 19, புஜாரா 13 என ஆட்டமிழந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து இணை சேர்ந்த மேக்ஸ்வெலும், மில்லரும் சென்னை அணியின் பந்து வீச்சை நாசம் செய்தனர். மேக்ஸ்வெல் 43 பந்துகளில் 15 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பிறகு மில்லருடன் இணை சேர்ந்த அணித் தலைவர் பெய்லி அவர் பங்கிற்கு அதிடியாக ஆடி, மொத்தத்தில் 18.5 ஓவர்கரளில் 206 என்ற வெற்றி இலக்கை எட்டி இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது பஞ்சாப் அணி.