அவர் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சிகிறோம். இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம். பெங்களூர் அணி வலிமையாக இருக்கிறது. இந்த தடவை அணியில் அனுபவம் மற்றும் இளமை என சிறந்த கலவையாக உள்ளது. மேலும் திறமையாக சில வீரர்களும் வந்து உள்ளனர்.
அதை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சி செய்வோம். இந்த ஆண்டு பெங்களூர் அணியின் ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி, வீரர்கள் ரிலாக்சாகவும், உற்சாகமாகவும் விளையாட உதவிகரமாக இருக்கிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடிக்கு மத்தியில் விளையாடி விட்டு வரும் வீரர்கள் ரிலாக்ஸ் ஆகி விடுவார்கள் என்று அவர் கூறினார்.