இந்திய அணி 393 ரன்கள் குவிப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (13:07 IST)
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 393 ரன்கள் குவித்தது.


அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 108 ரன்கள், ரோஹித் சர்மா 79 ரன்கள், விராட் கோலி 78 ரன்கள் மற்றும் விருத்திமான் சாஹா 56 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்