இந்தியா-பாகிஸ்தான் ஒரு நாள் மழையால் தாமதம்!

Webdunia

செவ்வாய், 3 ஜூலை 2007 (16:44 IST)
கிளாஸ்கோவில் இன்று நடைபெற வேண்டிய இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக இன்னமும் துவங்கவில்லை!

கிளாஸ்கோவில் உள்ள டிட்வுட் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் மைதானத்தின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. தண்ணீரை அகற்றி ஆட்டத்திற்கு தோதாக மைதானத்தை கொண்டுவரும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய நேரப்படி 3.15 மணிக்கு இப்போட்டி துவங்க வேண்டும். போட்டி நடத்துவதற்கு ஏற்ற அளவில் மைதானம் உள்ளதா என்பதனை 6.30 மணிக்கு நடுவர்கள் சோதித்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்