‌விடுகதை‌க்கு ‌விடை தெ‌ரியுமா?

திங்கள், 18 ஜனவரி 2010 (13:42 IST)
குழ‌ந்தைகளா.. ‌கீழே உ‌ள்ள ‌‌விடுகதை‌க்கு ‌விடை த‌ெ‌ரி‌கிறதா எ‌ன்று பாரு‌ங்க‌ள். ஒரு முறை முய‌ற்‌சி செ‌ய்து ‌வி‌ட்டு, த‌ெ‌ரிய‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் ‌விடைகளை‌ப் பாரு‌ங்க‌ள்.

1. ஒரு சாண் குதிரைக்கு உடம்பெல்லாம் பல். அது என்ன?
2. நூல் நூற்கும் இராட்டை அல்ல; ஆடை நெய்யும் தறி அல்ல. அது என்ன?
3. சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும். அது என்ன?
4. காட்டில் கிடைத்த கட்டை கான மழை பொழிகிறது. அது என்ன?
5. தரையில் முட்டி விடும்; விரலில் ஒட்டி விடும். அது என்ன?
6. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன?

விடைக‌ள்

1.சீப்பு
2.சிலந்தி
3.உதடு-பற்கள்
4.மூங்கில்
5.மெட்டி
6.தராசு

வெப்துனியாவைப் படிக்கவும்