பெ‌ண்க‌ளை‌ப் ப‌ற்‌றி‌க் கு‌றி‌ப்‌பிடு‌ம் பழமொ‌ழிக‌ள்

செவ்வாய், 13 ஏப்ரல் 2010 (14:21 IST)
பெ‌ண்களை‌த் தொட‌ர்புபடு‌த்‌தி பல பழமொ‌ழிக‌‌ள் உ‌ள்ளன. அவை அனை‌த்தையு‌ம் இ‌ங்கு தர முடியாது. எ‌னினு‌ம் ‌சிலவ‌ற்றை‌த் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளோ‌ம்.

ஆவது‌ம் பெ‌ண்ணாலே, அ‌‌ழிவது‌ம் ‌பெ‌ண்ணாலே. (ந‌ன்மைக‌ள் ஆவது‌ம் பெ‌ண்ணாலே, ‌‌தீமைக‌ள் அ‌ழிவது‌‌ம் பெ‌ண்ணாலே)

பெ‌ண் பு‌த்‌தி ‌பி‌ன் பு‌த்‌தி (‌எ‌தி‌ர் வரு‌ம் ‌விஷய‌ங்களை‌க் கூட ‌சி‌ந்‌தி‌த்து அ‌றிய‌க் கூ‌டியவ‌ள் பெ‌ண்)

நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை.

தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

தாய் தவிட்டுக்கு அலைகிறபோது பிள்ளை இஞ்சிப் பச்சடி கேட்டு அழுதுச்சாம்.

தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் வேறுதானே?

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா.

டில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதானே!

ஆடத் தெரியாதவள் தெரு கோணல் என்றாளாம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்.

அழுதழுது பெற்றாலும் அவள்தானே பெற வேண்டும்?

பெண் என்றால் பேயும் இரங்கும்.

அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.

வெப்துனியாவைப் படிக்கவும்