என் மறுபிறவி

வெள்ளி, 29 மே 2009 (15:10 IST)
சில கால‌ம் குழ‌ந்தை‌ப்பேறு இ‌ல்லாம‌ல் ‌பிற‌ந்த குழ‌ந்தையை‌ப் ப‌ற்‌றி, தா‌ய் வடி‌த்த ‌க‌விதை இது.

என் உயிர் மழலையே,
சுக(பிரசவ)மாய் நீ
வெளி வருவா‌ய்யென்று நினைத்திருக்கையில்,
சுதந்திரமாய் தான் - நீ
வருவேனென்று ஆசைப்பட்டதால்,
நான் கத்தி போராடாமல்,
கத்தியோடு போராடினேன் - என்றாலும்
என் பத்து மாத சுகம்,
பத்தே நிமிடத்தில் வெளி வந்த - உன்
வீல் என்ற
அழுகையை கேட்ட
அந்த நொடி - இறைவா
என்னென்று சொல்வேன் - என்
கண்கள் மூடியிருந்தாலும்,
கருவிழிகள் உன்னைக் காண
பட்டாம்பூச்சியாய்
ஆனந்தக் கண்ணீரோடு
துடித்ததை யாரும்
பார்த்திருக்க மாட்டார்கள்.
என் மூச்சுக்காற்று - உன்
வாசத்தை தேடியதை - யாரும்
உணர்ந்திருக்க மாட்டார்கள்.
என் உதடுகள் அரைகுறை
மயக்கத்தில் -உன்னை
அழைத்ததை - யாரும்
கேட்டிருக்க மாட்டார்கள் - என்
செவிகள் மீண்டும் உன்
குரலை கேட்க தவம் கிடந்ததை
யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் - என்
உடம்பெல்லாம் மறத்துப்போனாலும்
உயிர் மட்டும் உன்னைக் காண
உனக்கே உனக்காய்
வாழ்ந்து கொண்டிருந்ததை - யாரும்
மறுக்க மாட்டார்கள்.

இந்த பூமிக்கு - நீ
ஒரு புதுப்பிறவி - உன்னால்
எனக்கும் ஒரு மறுபிறவி - இப்படியே
இறைவனுக்கு நன்றி சொல்லி - ஒரே ஒரு
வேண்டுகோளுடன்
வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல்
எல்லோர்க்கும்
ஓர் குழந்தை நிச்சயம் என்று - உன்
படைப்பினில் ஒரு சட்டம்
வைத்தால் என்ன?
பிரசவ வலியை விட
பிறர் சொல்லின் வலியால்
இப்பிறவியில் ஏங்கித் துடித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு
கொடுப்பாயா இறைவா மறுபிறவி?

வெப்துனியாவைப் படிக்கவும்