‌விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

செவ்வாய், 12 அக்டோபர் 2010 (15:10 IST)
குழ‌ந்தைக‌ளே ‌விடுகதைக‌ள் ‌சி‌ந்தனை‌யி‌ன் வேக‌த்தை‌த் தூ‌ண்டுவத‌ற்காக ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது. மறைமுகமாக‌ ஒரு பொருளை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்வது‌ம், அத‌‌ற்கு‌ள் ஒ‌‌ளி‌ந்‌திரு‌க்கு‌ம் பொருளை க‌ண்ட‌றிவது‌ம்தா‌ன் ‌விடுகதை‌.

ச‌ரி ‌சில ‌விடுகதைகளை இ‌ங்கே பா‌ர்‌ப்போ‌ம்...

நல்லவர் கொள்ளும் தானம்; நாலு பேருக்குத் தர முடியாத தானம். அது என்ன?
நிதான‌ம்

பகலெல்லாம் வெறுங்காடு; இரவெல்லாம் பூங்காடு. அது என்ன?
வான‌ம்

காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?
ச‌ப்பா‌த்‌தி‌க்க‌ள்‌ளி

உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?
விய‌ர்வை

குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல் சொல்கிறான்.
தபால்

மழைக் காலப் பாட்டுக் காரன், துள்ளிக் குதித்து ஆடிடுவான் கடைசியில் பாம்புக்கு இறையாவான்.
தவளை

வெப்துனியாவைப் படிக்கவும்