5 வருட காத்திருப்பு... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஷில்பா ஷெட்டி??

சனி, 22 பிப்ரவரி 2020 (12:39 IST)
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றனர். 
 
இந்திய திரைப்பட நடிகையும், பிரபல மாடலமாக இருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் குஷி, மிஸ்டர் ரோமியோ ஆகிய தென்னிந்திய தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
 
நடிகை ஷில்பா ஷெட்டி கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ’வியான்’ என்று பெயரிட்டனர்.
இந்நிலையில், ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்தரா தம்பதியர்க்கு, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு சமீசா ஷெட்டி குந்த்ரா என பெயர் வைத்துள்ளதாக நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்தார் ஷில்பா ஷெட்டி. 
 
ஆனால், இந்த குழந்தை வாடகை தாய் மூலம் பெற்றெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. முதலில் ஆண்டு குழந்தை பிறந்ததும் 5 வருடங்கள் காத்திருந்து பின்னர் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்துக்கொண்டாத செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த செய்தியின் உண்மை நிலை கேள்விக்குறியானதே...

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்