20 கோடி வரி ஏய்ப்பு? 3 நாள் ரெய்டு குறித்து மெளனம் களைத்த சோனு சூட்!

திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:03 IST)
வருமானவரித்துறையினர் ரெய்ட் குறித்து மெளனமாய் இருந்த சோனு சூட் இது குறித்து தற்போது பேசியுள்ளார். 
 
இந்தி வில்லன் நடிகரான சோனு சூட் தமிழில் ஒஸ்தி, அருந்ததீ போன்ற படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன்மூலம் எண்ணற்ற உதவிகளை செய்து வந்தார்.
 
இந்நிலையில் அவரது மும்பை வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதில் சோனுசூட் ரூ.20 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
இதனிடையே ரெய்ட் குறித்து மெளனமாய் இருந்த சோனு சூட் இது குறித்து தற்போது பேசியுள்ளார். அவர் கூறியதாவது, எனது அறக்கட்டளையி இருக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒரு மனித உயிரை காப்பாற்ற காத்திருக்கிறது. பல நேரங்களில் எனது சம்பளத்தை மக்களுக்காக வழங்கும் படி கூறியிருக்கிறேன். 
 
கடந்த சில நாட்களாக சிலரை சந்திப்பதில் மும்முரமாக இருந்ததால் உங்களுடன் தொடர்பில் இருக்க முடியவில்லை. இங்கே நான் மீண்டும்  திரும்பி வந்துவிட்டேன். உங்கள் தாழ்மையான சேவையில், வாழ்நாள் முழுவதும் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்