இரண்டு பேருந்துகள், டேங்கர் மோதி விபத்து - 50 பேர் பலி

ஞாயிறு, 8 மே 2016 (17:46 IST)
ஆப்கானிஸ்தானில் இரண்டு பேருந்துகளும் எரிபொருள் டேங்கர் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 

 
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலையும் தெற்கே காந்தஹாரையும் இணைக்கும் பிரதான நெடுஞ்சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். மூன்று வாகனங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன.
 
ஆப்கானிஸ்தானில் மோசமான வீதிகளின் நிலைமையாலும் போக்குவரத்து விதிகள் சரிவர கடைப்பிடிக்கப்படாமையாலும் சாலை விபத்துக்கள் அதிகளவில் நடப்பது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்