காபூலில் தாலிபன்கள் கொண்டாட்டம்

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:56 IST)
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறியதை தாலிபன்கள் கொண்டாடி வருகின்றனர்.

தாலிபன்களை நாட்டைக் கைப்பற்றிய பின்னரும் வெளியேற்ற நடவடிக்கைகளுக்காக காபூல் சர்வதேச விமான நிலையம் அமெரிக்கா தலைமையிலான படைகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இப்போது அதுவும் தாலிபன்கள் வசம் வந்துள்ளது.
 
அங்கு தாலிபன்கள் இருப்பதைக் காட்டும் சில காணொளிகள் வெளியாகியுள்ளன. எனினும், அவற்றை பிபிசியால் சுயாதீனமாக உறுதிசெய்ய இயலவில்லை.
 
காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் கொண்டாடும் வகையிலான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நகர தெருக்களிலும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்