பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டபோது கூட இலங்கை உச்சநீதிமன்றம் அவற்றை விரிவாக விசாரிக்க தவறியதாகவும் அவர் குறை கூறியுள்ளார். இதன் காரணமாகவே இலங்கையில் சர்வதேச நீதிபதிகளை கொண்ட விசாரணைக்கு கேட்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஆனால், இலங்கை விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிப்பதை தான் எதிர்ப்பதாக கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்க உப தலைவரான சாலிய பீரிஸ், கடந்த காலங்களில் இலங்கை நீதிமன்றங்கள் முக்கியமான பல தீர்ப்புக்களை வழங்கியுள்ளதாக கூறுகின்றார்.
சர்வதேச நீதிபதிகள் திட்டத்தை நிராகரித்த அவர், ஆனால், நீதிமன்ற சுதந்திரம் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றார்.