வறுமை காரணமாகவும், வசதியற்ற நிலை காரணமாகவும் வீடுகளின்றி தெருக்களில் வசித்து பிச்சையெடுத்து வாழ்பவர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அவர்களுக்கும் ஜனநாயக உரிமை இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
புலம் பெயர்ந்திருப்பவர்கள், வெளிநாடுகளில் தொழில் செய்பவர்கள் போன்ற தற்காலிகமாக நாட்டைவிட்டு வெளியேறியிருப்பவர்கள் தேர்தல் திணைக்களத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.