பாகிஸ்தானில், பேஸ்புக் தளத்தில் மத நிந்தனை செய்யும் வண்ணம் ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டதாக வந்த வதந்திகளை அடுத்து, பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதில், ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டனர் என்று போலிசார் கூறுகின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இதே மாகாணத்தில் ஒரு கிராமத்தில், போலிஸ் நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த ஒரு பதின்பருவ இளைஞன், மத நிந்தனைக் குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வந்த ஒரு அஹ்மதி பிரிவு நபரைச் சுட்டுக் கொன்றான்.