இந்த இணையத்தளத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த இணையதளம் மக்களுக்கும், அரசுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் என்று தெரிவித்தார். அத்துடன் புதிய மத்திய அரசின் 60 நாள் ஆட்சி குறித்த மக்களின் கருத்துகளை இதில் பதிவுசெய்யுமாறும் மோடி தெரிவித்துள்ளார்.
பங்களிப்பு இல்லாமல் ஜனநாயம் வெற்றியடையாது, மக்களின் இந்தப் பங்களிப்பு தேர்தல் காலத்தோடு மட்டும் நின்று விடக்கூடாது என்று தெரிவித்த பிரதமர் நரேந்திரமோடி, கங்கையைச் சுத்தப்படுத்துதல், பெண் குழந்தை கல்வி, சுத்தமான இந்தியா, திறன்மிக்க இந்தியா போன்ற முக்கிய வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் முறை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பொதுமக்கள் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.