இன்று புது தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இணைவது தனக்கு தன் வீடு திரும்புவது போன்ற ஒரு அமைதி மற்றும் நிம்மதி கிடைத்திருப்பதாகத் தெரிவித்தார். அவர் பாரதீய ஜனதா கட்சியில் சேரவிருக்கிறார் என்று வந்த தகவல்களை மறுத்த அவர், அது செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி என்று தெரிவித்தார். இந்தியா ஒன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழி காங்கிரஸ்தான் என்றும் அவர் கூறினார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தமிழக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவன், அவரது வருகை காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.