துப்பாக்கிச் சூட்டு அணியினரால் மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளவர்களுள் ஆஸ்திரேலியா, பிரேசில், மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகளும் அடங்குவர். பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய அதிபர் வெளிநாட்டுத் தலைவர்களின் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளார்.