காஸ்ட்ரோவின் கம்யூனிஸ புரட்சியை அடுத்து கிட்டத்தட்ட 50 வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் முறிந்துபோயிருந்தன. காஸ்ட்ரோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தான் இன்னமும் அமெரிக்காவை நம்பவில்லை என்றும், ஆனால், பிரச்சினைகளுக்கு அமைதியான வழியில் தீர்வு காண்பதை நான் நிராகரிக்கிறேன் என்று அதற்கு அர்த்தமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.