எடப்பாடி பழனிசாமி vs மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் உரை என்ன?

திங்கள், 13 செப்டம்பர் 2021 (12:37 IST)
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும் . குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின். இதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது நீட் தேர்வு தொடர்பாக முவைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார்.

"அச்சம் விலக்கி, நம்பிக்கையூட்டி நீட்தேர்வுக்கு தயார்படுத்தி, நன்மதிப்பெண் பெற்று மருத்துவராக வேண்டிய மாணவன் தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று, ரகசியம் வைத்திருப்பதாக சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்," என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

"நீட் தேர்வு நடைபெறுமா, நடைபெறாதா, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களை தெளிவுபடுத்த வேண்டும் ," என்றும் நேற்றைய அறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக, "நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கருணாநிதி என்றும் மறைந்த முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா கூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை," என்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசினார் ஸ்டாலின்.

எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு ஸ்டாலின் அளித்த பதிலின் முக்கிய சாராம்சம் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்