ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்களுக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதையடுத்து, தண்டிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மீனவர்கள், பொதுமக்களில் ஒரு பகுதியினர் ராமநாதபுரம் பகுதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பாம்பனிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மரங்களை வெட்டிப் போட்டும், கற்களைப் போட்டும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.