பாகிஸ்தானின் பேஷாவார் நகரில் செவ்வாயன்று நடந்த பள்ளிக்கூட படுகொலைக்கான பதில் நடவடிக்கையாக, இதுவரை மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு இருந்த இடைக்கால தடையை நீக்கி, மேலும் ஒரு கைதியை தூக்கில் இடப் போவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பழிவாங்கும் எண்ணத்தில் இரத்தவெறி கொண்ட மரணதண்டனையை மீண்டும் ஆரம்பிப்பது என்பது, பள்ளிக்கூடத் தாக்குதலாளிகளை கண்டறிவதற்கான முயற்சிகளை தடம்புரளச் செய்துவிடும் என்று ஐநா மனித உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது.