பீகாரில் போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம்; 1000 பேர் கைது

திங்கள், 30 மார்ச் 2015 (18:40 IST)
பீகார் மாநிலத்தில் காவல்துறை தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கடந்த மாதத்தில் கைதாகியுள்ளனர்.
போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், கட்டாய உடற்தகுதி தேர்வில் தங்களுக்காக ஆள்மாறாட்டம் செய்வதற்காக இவர்களை அமர்த்தியிருந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த மாதத்தின் முற்பகுதியில், பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில் மாணவர்கள் மோசடி செய்வதற்கு உதவிய சுமார் 300 பேரை பீகார் போலீசார் கைது செய்திருந்தனர்.
 
கைதுசெய்யப்பட்டவர்களில் பெற்றோர்கள் பலரும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்