உலகத் தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியான த வாய்ஸ் பாடகர் போட்டியின் இத்தாலிய வடிவ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையை சாதாரண மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற பாப்பரசர் பிரான்சிஸின் வேண்டுகோளை பின்பற்றியே தான் இந்தப் போட்டியில் பங்குபற்றியதாக 25 வயதான அருட்சகோதரி கிறிஸ்தீனா கூறினார்.