இப்போது புரிகிறது.. சமக வேட்புமனு ஏன் நிராகரிக்கப்பட்டது என்று..

வியாழன், 6 ஏப்ரல் 2017 (17:40 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர, ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளருமான சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சமக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரெனெ டிடிவி தினகரனின் இல்லத்திற்கு சென்ற சரத்குமார் அவருக்கு தனது ஆதரவை தெரிவித்தார். 
 
மேலும், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் “ ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர தினகரனுக்கு ஆதரவு அளித்திருக்கிறோம். திமுகவின் கனவு பலிக்காது. தினகரன் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நாளை முதல் நான் ஆர்.கே.நகரில் தினகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போகிறேன்” என அவர் கூறினார். 
 
சமக வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட போது, அதுபற்றி சரத்குமார் எந்த கருத்தும் கூறவில்லை. மேலும், தினகரன் கேட்டுக் கொண்டதாலேயே சரத்குமார் பின்வாங்கினார் எனவும் அப்போது கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது தினகரனுக்கு சரத்குமார் ஆதரவு தெரிவித்திருப்பது அதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்